Breaking News

ரயில் பயணிகளே நாளை முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் வழக்கமான ரயில் சேவை!

அட்மின் மீடியா
0
ரயில் பயணிகளே நாளை முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் வழக்கமான ரயில் சேவை!

தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரயில் நிலையத்தின் 6 நடை மேடைகளையும் இணைத்து, டெர்மினல் கட்டடம் கட்டப்படவுள்ளதால் தாம்பரம் ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் காரணமாக விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள் rஅத்து செய்யப்பட்டும் , நேரம் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது

இதனால் கடந்த இரு வாரங்களாக தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆக.15 முதல் ஆக.18-ம் தேதி வரை மின்சார ரயில்கள் மட்டுமின்றி விரைவு ரயில்களும், தாம்பரத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தாம்பரம் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளதால் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback