ரயில் பயணிகளே நாளை முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் வழக்கமான ரயில் சேவை!
தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரயில் நிலையத்தின் 6 நடை மேடைகளையும் இணைத்து, டெர்மினல் கட்டடம் கட்டப்படவுள்ளதால் தாம்பரம் ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் காரணமாக விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள் rஅத்து செய்யப்பட்டும் , நேரம் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது
இதனால் கடந்த இரு வாரங்களாக தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆக.15 முதல் ஆக.18-ம் தேதி வரை மின்சார ரயில்கள் மட்டுமின்றி விரைவு ரயில்களும், தாம்பரத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தாம்பரம் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளதால் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Tags: தமிழக செய்திகள்