மகாராஷ்டிராவில் பட்டப்பகலில் மகனை கத்தியால் தாக்கிய நபர்களை கற்களை வீசி விரட்டியடித்த வீரத்தாய் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
மகாராஷ்டிராவில் பட்டப்பகலில் மகனை கத்தியால் தாக்கிய நபர்களை கற்களை வீசி விரட்டியடித்த வீரத்தாய் வைரல் வீடியோ
மகாராஷ்டிராவின் கோல்ஹாப்பூர் பகுதியில் மகனை ஆயுதத்தால் தாக்கிய நபர்களை, துணிச்சலுடன் கல்லால் அடித்து விரட்டிய தாய் பைக்கில் வந்த இருவர், மகனை வாளால் தாக்க சிறிதும் தாமதமின்றி கீழே கிடந்த கற்களை எடுத்து வீச, அவர்கள் அங்கிருந்து தப்பித்தனர். முன்பகையால் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக போலீசார் தகவல்
மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் ஜெய்சிங்பூரில் சாலையோரம் தனது தாயாருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரில் ஒருவர் தன்னிடம் இருந்த தாயிடம் பேசிக்கொண்டிருந்த வாலிபர் மீது வெட்டினார்.
ஆனால் அவரது குறி தவறிவிட்டது அப்போது அவருடன் பேசிக்கொண்டிருந்த அவரது தாயார் கீழே கிடந்த கல்லை எடுத்து மூன்று பேர்மீதும் வீசி எறிந்தார். அப்பெண்ணுடன் அவரது மகனும் சேர்ந்து கற்களை எடுத்து மூன்று பேர்மீதும் வீசினார். இத்தாக்குதலை எதிர்பாராத மூன்று பேரும் தப்பினால்போதும் என்று ஓடிவிட்டனர்.
போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். iந்நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ