Breaking News

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு முழு விவரம்

ரேஷன் கடை ஊழியர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்


தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் தங்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 5ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் சுமார் 35,000 ரேஷன் கடை பணியாளர்கள் அன்றைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.

பணிப்பதிவேடு பராமரிப்பு, வங்கி மூலம் ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறவுள்ளது

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback