Breaking News

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பள்ளித் தாளாளர் அருண்ராஜ் என்பவர் கைது

அட்மின் மீடியா
0

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பள்ளித் தாளாளர் அருண்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த வாரம் குழந்தையை கடத்தி குடும்பத்தை கொலை செய்துவிடுவதாக பொற்கொடிக்கு மிரட்டல் கடிதம் வந்த நிலையில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு சதீஷ் என்ற பெயரில் கடந்த வாரம் கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் குழந்தையை கடத்தி குடும்பத்தை கொலை செய்வோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் அருண்ராஜை அழைத்து வந்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை நடத்திய நிலையில் தனியார் பள்ளி தாளாளர் அருண்ராஜை போலீசார் கைது செய்தனர்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback