தமிழ்நாடு முழுவதும் குறைந்த விலையில் மருந்து மாத்திரை விற்பனை செய்ய முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும்
மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும் வண்ணம் முதல்வர் மருந்தகம் எதிர்வரும் பொங்கல் தினத்தன்று பயன்பாட்டுக்கு வரும்.
இதில் சிறப்பாக செயல்படும் மருந்தாளுனர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு, ₹3 லட்சம் மானியம் அரசால் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை தேசியக் கொடியை ஏற்றி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்து திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது. வளர்ச்சி என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
:1. குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் முதல்வர் மருந்தகம் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படும்.
2. முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் காக்க, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
3. தியாகிகள் ஓய்வூதியம் ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக அதிகரிப்பு.
4. வயநாடு சம்பவத்தின் எதிரொலியாக, நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
5. 2026 ஜனவரி மாதத்துக்குள் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
6. தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 11 ஆயிரம் ஓய்வூதியம் ரூ. 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்
Tags: தமிழக செய்திகள்