Breaking News

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கடைக்குள் புகுந்து இளைஞர் வெட்டி கொலை முழு விவரம்

அட்மின் மீடியா
0

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கடைக்குள் புகுந்து சையது தமீம்  வெட்டி கொலை முழு விவரம்

நெல்லை மேலப்பாளையம் விஎஸ்டி பள்ளிவாசல் அருகே சையது ஆன்லைன் சர்வீஸ் இ சேவை மையம் கடை நடத்தி வருபவர் சையது தமீம் இவர் நேற்று இரவு தனது கடைக்குள் இருக்கும் போது மர்ம நபர்கள் இவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்கள். கடையில் இருந்து இரவு வீடு திரும்பாததால் போன் செய்தும் போன் எடுக்காததால் கடைக்கு வந்து தந்தை பார்த்தபோது தான் சையது படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலப்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்தவர்கள் யார் ? எதற்க்காக கொலை செய்யப்பட்டது என தீவீர விசாரனையில் ஈடுபட்டு வருகின்றார்கள்

மேலும் சொத்து பிரச்சனை காரணமாக கொலை நடந்ததா, வேறெதுவும் காரணமா எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கொலையாளிகள் பிடிக்க தனிபடை அமைக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback