ரயில் வருவதுகூட தெரியாமல் தண்டவாளத்தில் குடைபிடித்தபடி படுத்து தூங்கிய நபரை எழுப்பிய ரயில் ஓட்டுநர் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
ரயில் வருவதுகூட தெரியாமல் தண்டவாளத்தில் குடைபிடித்தபடி படுத்து தூங்கிய நபரை எழுப்பிய ரயில் ஓட்டுநர் வைரல் வீடியோ
உத்திரபிரதேசத்தில் ரயில் வருவது கூட தெரியாமல் தண்டவாளத்தில் ஒருவர் குடையை பிடித்தபடி தூங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்பி அப்புறப்படுத்திய பிறகு ரயில் இயக்கப்பட்டது
உத்தர பிரதேசத்தில் பிரக்யாராஜ்ஜில் - பிரதாப்கர் ரயில் வழித்தடத்தில் ரயில் தண்டவாளத்தில் ஒரு நபர் குடையுடன் படுத்து தூங்கியதாக தெரிகிறது/ இந்த நிலையில் ரயில் லோகோ பைலட் தூரத்திலிருந்த போதே யாரோ ஒருவர் தண்டவாளத்தில் படுத்திருப்பதை பார்த்ததும் சுதாரித்து ரயிலை நிறுத்தினார்.
அதன் பிறகு அவர் இறங்கி வந்து தண்டவாளத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தவரை லோகோ பைலட் எழுப்பியதை அடுத்து எழுந்து அவர் சென்றதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ரயில் தண்டவாளத்தில் குடையுடன் தூங்கிய நபர் மனநல குறைபாடு உள்ளவர் என்று அந்த பகுதி மக்கள் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1827658160515276876
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ