Breaking News

மகாராஷ்டிராவில் சிமெண்ட்டால் செய்யப்பட்ட போலி பூண்டு வைரல் ஆகும் வீடியோ

அட்மின் மீடியா
0
மகாராஷ்டிராவில் சிமெண்ட்டால் செய்யப்பட்ட போலி பூண்டு வைரல் ஆகும் வீடியோ 
 
 

மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவில் உள்ள சந்தையில் கண்டுபிடிக்கப்பட்ட சிமெண்டால் செய்யப்பட்ட பூண்டு பூண்டை வாங்கிய நபர், பூண்டை உரிக்கும் போது அதில் வெறும் சிமெண்ட் மட்டுமே இருந்ததால் அதிர்ச்சி. 
 
நாடு முழுவதும் பூண்டின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், போலி பூண்டு விற்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது
 
மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவில் வசிக்கும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான சுபாஷ் பாட்டீலின் மனைவி விற்பனையாளரிடமிருந்து 250 கிராம் பூண்டு வாங்கியுள்ளார் , தான் வாங்கிய அந்த பூண்டினை வீட்டிற்க்கு வந்து உரிக்கும் போது அந்த பூண்டில் இரண்டு பூண்டுகள் சிமெண்டால் ஆனது என்பதைக் கண்டுபிடித்தார், அதாவது எடையை அதிகரிக்க இது போல் போலியான பூண்டை அதில் கலந்து விற்பனை செய்துள்ளார்கள் எனவும் அந்த போலி பூண்டு சுமார் 100 கிராம் எடையளவில் உள்ளது என செய்தி வெளியாகி அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது.


வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
 
https://x.com/adminmedia1/status/1825424051126563318

இச்சம்பவம் சந்தையில் போலியான பொருட்கள் இருப்பது குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback