சிவராமனின் இறப்பு பற்றி பொய்செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
பாலியல் வழக்கில் கைதாகி, எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்த சிவராமனின் இறப்பு பற்றி பொய்செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:-
கந்திக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5.8.2024 முதல் 9.8.2024 தேதி வரை பள்ளியின் அனுமதியுடன் NCC முகாம் நடத்தப்பட்டுள்ளது. மேற்படி முகாமை நடத்துவதற்காக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாவட்ட தலைவராக இருந்த சிவராமன் என்பவர், தான் NCC பயிற்சி வழங்க முறையான அனுமதி பெற்றதாகவும், NCC முகாம் நடத்தி தருவதாக கூறி இரண்டு பெண்கள் உட்பட ஐந்து நபர்களை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். மேற்படி முகாமில் பங்கு பெற்ற 17 மாணவிகள் உட்பட 41 மாணவர்கள் நான்கு நாட்கள் அந்த பள்ளியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அப்போது சில மாணவிகளிடம் எதிரி சிவராமன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது சம்பந்தமாக 17.08.2024 ம் தேதி பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் மற்றும் மாவட்ட குழந்தை நல அலுவலர் ஆகியோர்கள் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் நேரில் விசாரணை மேற்கொண்டு, மேற்படி சம்பவம் தொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண். 14/24 uls 5 (o) niw 6, 9 (o) riw 10, 21 (2) of POCSO Act 2012 & 238 BNS கீழ் 17.08.2024 ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.r
சிவராமனின் இறப்பு பற்றி பொய்செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை' - காவல்துறை எச்சரிக்கை..மேற்படி வழக்கில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய மற்றும் சம்பவத்தை காவல் துறைக்கு தெரிவிக்காமல் மறைத்த பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் உட்பட 11 எதிரிகள் கைது செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டனர்.இவ்வழக்கின் முக்கிய எதிரி சிவா @ சிவராமன்(35) S/0 அசோக்குமார், காந்தி நகர் காலனி, காவேரிப்பட்டிணம் என்பவர் 19.08.2024 ம் தேதி சுமார் 1 மணியளவில் பொன்மலை கோயில் அருகே தேவசமுத்திரம் கிராமம், கிருஷண்கிரி தாலுக்கா காவல் நிலைய எல்லையில் கைது செய்ய முற்பட்டபோது எதிரி போலீசாரிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது காலில் முறிவு ஏற்பட்டது.
எதிரிக்கு எலும்பு முறிவு காரணமாக 19.08.2024 ம் தேதி அதிகாலை 2 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.19.08.2024 ம் தேதி அதிகாலை 3 மணியளவில் பர்கூர் காவல் ஆய்வாளர் அவர்களால் எதிரி சிவராமனை கிருஷ்ணகிரி மருத்துவமனையில் கைது செய்யபப்பட்டு விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெறப்பட்டது. மேற்கண்ட விசாரணையில் எதிரி சிவராமன் கைது செய்வதற்கு 2 தினங்களுக்கு முன்பு எலி மருந்து உட்கொண்டதாக ஒப்புக்கொண்டார். மேலும் எதிரி எலிமருந்தை உட்கொண்டதை மருத்துவர்கள் எதிரியின் Medcal History Sheet குறிப்பிட்டுள்ளார்.
எதிரி சிவராமன் கடந்த 21.08.2024 ம் தேதி மதியம் 12.15 மணியளவில் மேல் சிகிச்கைகாக சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.எதிரி சிவராமன் 21.08.2024 ம் தேதி சுமார் இரவு 07.00 மணியளவில் சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் 10.45 மணி முதல் 12.45 மணி வரை Dialysis சிகிச்சை வழங்கப்பட்டது. மீண்டும் 22.08.2024 ம் தேதி காலை 09.30 மணி முதல் 10.00 மணி வரை எதிரி சிவராமனுக்கு Dialysis சிகிச்சை வழங்கப்பட்டது.
இன்று (23.08.2024) அதிகாலை சுமார் 05:30 மணிக்கு எதிரி சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 09.07.2024 ம் தேதி எலி மருந்து சாப்பிட்டு TCR மருத்துவமனை கிருஷ்ணகிரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்று 22.08.2024 ம் தேதி இரவு 10.15 மணிக்கு மேற்கண்ட வழக்கின் எதிரியான சிவராமன் என்பவரின் தந்தை அசோக்குமார் தனது இருசக்கர வாகனமான TVS XL -ல் திம்மாபுரத்திலிருந்து காவேரிப்பட்டிணம் நோக்கி சென்றபோது தேர்பட்டி என்ற இடத்தில் விஷ்னு மெடிக்கல்ஸ் அருகில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலை மற்றும் தோல்பட்டையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக சம்பவயிடத்திலேயே அசோக்குமார் உயிரிழந்துள்ளார்.
மேலும் இது சம்மந்தமாக அவரது மனைவி பத்மா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய குற்ற எண். 468/24 u/s 281, 106 BNS பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பிரேதத்தை பிரேத விசாரணைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிரியின் தந்தை அசோக்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தானகவே நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்துள்ளார் என்பதை முதற்கட்ட விசாரணையிலும் CCTV கேமிராக்களை ஆய்வு செய்ததிலிருந்தும் தெரிய வருகிறது.இவ்வழக்கின் எதிரி சிவராமன் இறப்பை பற்றியும், அவரது தந்தை அசோக்குமார் இறப்பை பற்றியும் ஏதேனும் தவறான செய்தியை பரப்புவோர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது." என்று குறிப்பிப்பட்டுள்ளது.
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்
Tags: தமிழக செய்திகள்