Breaking News

என் அப்பாவை ஜெயிலில் போடுங்க காவல்நிலையத்தில் COMPLAINT கொடுத்த ஐந்து வயது மகன் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

என் அப்பாவை ஜெயிலில் போடுங்க காவல்நிலையத்தில் COMPLAINT கொடுத்த ஐந்து வயது மகன் வைரல் வீடியோ

 


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் உள்ள பக்கனேர் கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஹஸ்னைன் என்ற 5 வயது சிறுவன் சொந்த தந்தைக்கு எதிராக புகார் அளித்துள்ளார். 

ஹஸ்னைன் காவல் நிலையத்திற்கு வந்து அவரது தந்தை இக்பால் காத்ரி மீது புகார் அளித்துள்ளார். இதனை கேட்ட போலீசார் ஆச்சரியத்துடன் என்ன புகார் என விசாரித்துள்ளார் அதற்க்கு அந்த சிறுவன் தனது தந்தை என்னை சாலை அருகே செல்லக்கூடாது, ஆற்றுக்கு செல்லக்கூடாது என தினமும் தன் தந்தை திட்டுவதாகவும், இதனால் கோபமடைந்த சிறுவன் தனது தந்தை ஊரில் இல்லாத சமயத்தில் நேராக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார், மேலும் அவரை கைது செய்து சிறையில் அடையுங்கள் என்றும் கோபமாக கூறியுள்ளார்

போலீசார் அந்த சிறுவன் ஹஸ்னைனை நாற்காலியில் உட்கார வைத்து, அவர் சொல்வதை முழுமையாக கேட்டு, அவரது தந்தை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.  நீங்க வீட்டுக்கு செல்லுங்கள் என்று வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த 5 வயது சிறுவனின் தந்தை இக்பால் என்பது தெரியவந்தது. போலீசார் அவரது வீட்டுக்கு சென்ற போது இக்பால் அங்கு இல்லை.இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகின்றது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1826160309104685543

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback