Breaking News

கொல்கத்தாவில் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம் நடந்தது என்ன முழு விவரம் Kolkata doctor rape and murder case

அட்மின் மீடியா
0

கொல்கத்தாவில் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம் நடந்தது என்ன முழு விவரம் Kolkata doctor rape and murder case

 

கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி கடந்த வியாழக்கிழமை இரவுப் பணிக்கு வந்தவர் வெள்ளிக்கிழமை காலை கருத்தரங்கு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

பணிபுரியும் மருத்துவமனையிலேயே மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது பிறப்பு உறுப்பு, வயிறு, வலது தொடை, கழுத்து, வலது கை, உதட்டில் காயங்கள் இருந்தன. கழுத்து எலும்பு முறிந்துள்ளது. இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் 

இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைக்க மேற்குவங்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொலையாளி வாக்குமூலம்:-

இந்த கற்பழிப்பு கொலை வழக்கில் சஞ்சய் ராய் 48 மணி நேர போலீஸ் விசாரணைக்கு பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவ தினமான ஆகஸ்ட் 8 ஆம் தேதி சுமார் 10 மணியளவில் ஆர்ஜி மருத்துவமனைக்குள் நுழைவது மருத்துவமனை சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது. கருத்தரங்கு அரங்கில் இளம் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக அவரைத் துன்புறுத்த முயன்றுள்ளார். 

மருத்துவர் எதிர்த்து கத்த ராய் அவரை கடுமையாகத் தாக்கி அவள் முகத்தை அழுத்தி தலையை தரையில் பலம் கொண்ட மட்டும் அடித்துள்ளார். 

இந்த கொடூரமான தாக்குதலால் நிலைக்குலைந்த மருத்துவர் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார் அதனை தொடர்ந்து அவரை  பலாத்காரம் செய்துள்ளார், இதில் மருத்துவர் உயிரிழந்ததுளார் .அதன் பின்னர் அதிகாலை 4:37 மணிக்கு எதுவும் தெரியாததைப் போல மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார் என வாக்கு மூலம் அளித்துள்ளார்

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback