Breaking News

காலையில் திருமணம் மாலையில் மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு கத்தியால் தன்னை தானே குத்தி தற்கொலை முயற்சி செய்த நபர் Man kills wife hours after their marriage

அட்மின் மீடியா
0

காலையில் திருமணம் மாலையில் மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு கத்தியால் தன்னை தானே குத்தி தற்கொலை முயற்சி செய்த நபர் Man kills wife hours after their marriage 

திருமணமான ஒரே நாளில் காதல் தம்பதி, ஒருவரையொருவர் கத்தியால் குத்திய சம்பவம் மணமகள் உயிரிழப்பு - மணமகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நவீன் (27) என்பவருக்கும், கேஜிஎஃப் பகுதியில் உள்ள பைன்பள்ளியைச் சேர்ந்த லிகிதா ஸ்ரீ (20) என்பவருக்கும் புதன்கிழமை காலை திருமணம் நடைபெற்றது

 


அதன்பின்பு நவீன் லிகிதாவை அவரது மாமியார் அழைத்துச் சென்றார்கள், அங்கு அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. சில நிமிடங்கள் கழித்து நவீனும் லிகிதாவும் ஒரு அறைக்குள் சென்று கதவை மூடினார்கள். அடுத்த சில நிமிடங்களில், அவர்கள் ஒருவரையொருவர் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள், ஜன்னல் வழியாக அறையைப் பார்த்தபோது, ​​நவீன் லிகிதாவை அரிவாளால் தாக்குவதைக் கண்டனர்

அறையின் கதவை உடைத்து திறக்க முயன்றும் அவர்களால் உடனடியாக முடியவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது, ​​லிகிதா ரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், நவீன காயங்களுடன் இருப்பதையும் கண்டனர். 

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் லிகிதா இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்த நிலையில், போலீசார் நவீனை மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

 

தகவல் அறிந்து வந்த ஆண்டர்சன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

முதற்கட்ட விசாரனையில் லிகிதாவை தாக்கிய பிறகு நவீன் தன்னைத்தானே தாக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

மேலும் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட சண்டைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை மேலும் நவின் கண்விழித்தால் தான் கொலைக்கான சரியான காரணம் தெரியவரும்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback