வாயால் வந்த வினை விமான நிலைய சோதனையின் போது விளையாட்டாக எனது பையில் வெடிகுண்டு இருக்கிறதா என கேட்ட பயணி கைது செய்த போலீசார் Passenger held in Kochi airport for asking 'Is there a bomb in my bag' during security check
அட்மின் மீடியா
0
எனது பையில் வெடிகுண்டு இருக்கிறதா என்று மனோஜ் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டுள்ளார்.வெடிகுண்டு பற்றி இவர் பேசுகிறார் என்று பதறிய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது கைதுசெய்துள்ளனர்.
கேரளாவில் உள்ள கொச்சின் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (CIAL) ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கமான பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று வந்தது. பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்து அவர்களை விமானத்தில் பயணம் செய்ய அனுப்பிவைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கொச்சியிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் செல்லவிருந்த மனோஜ் குமார் (42) என்பவரது பையையும் அதிகாரிகள் சோதித்துள்ளனர். எந்த பிரச்சனையும் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் முடிவுசெய்தபோது, என் பையில் வெடிகுண்டு இருக்கிறதா? அதனால் தான் இப்படி சோதனை நடத்துகிறீர்களா?என்று மனோஜ்குமார் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டுள்ளார்.
உடனடியாக பதற்றத்தில் அந்த பாதுகாப்புப் படை வீரர் மேலதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதனால் கொச்சி விமான நிலையம் பரபரப்பானது.
மும்பை செல்ல காத்திருந்த பயணி மனோஜின் அனைத்து உடைமைகளும் முழுமையாக சோதிக்கப்பட்டது. அவரிடம் வெடிகுண்டு உள்ளிட்ட ஆபத்தான எந்த பொருட்களும் இல்லை. ஆனால் தொழிலகப் பாதுகாப்பு அதிகாரியிடம் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பொருள் பற்றி குறிப்பிட்டதால் வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் பயணி மனோஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இருந்த போதும் மனோஜிடம் தொடர்ந்தும் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: இந்திய செய்திகள்