Breaking News

சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய SC, ST ஆணையம் உத்தரவு நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய SC, ST ஆணையம் பரிந்துரை

அவதூறு வார்த்தையை பயன்படுத்தியதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நாளைக்குள் வழக்குப்பதிவு செய்ய மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் காவல்துறைக்கு பரிந்துரை


குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாக பயன்படுத்தியதற்காக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்திற்கு தேசிய SC/ST ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலைஞரை விமர்சிப்பதற்காகச்  வேறு ஒரு சமூக பெயரைச் சீமான் பயன்படுத்தியது சம்பந்தப்பட்ட சமூகத்தினரை இழிவுப்படுத்தியதாக தமிழ்நாட்டின் பல பகுதியில் இருந்து சீமான் மீது புகார் கொடுக்கப்பட்டது.

அந்த வகையில் இது தொடர்பாக ஆவடி பட்டாபிராம் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி அஜேஷ் என்பவர் புகார் அளித்திருந்தார். ஆனால் புகாரின் பேரில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்திடம் சீமான் குறித்து புகார் அளித்துள்ளார். 

அதன்பேரில், விசாரணை நடத்தப்பட்ட நிலையில்சீமான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையருக்கு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback