SRM கல்லூரி அருகே பரபரப்பு - கஞ்சா சோதனையில் 500 போலீஸ் முழு விவரம் இதோ
SRM கல்லூரி அருகே பரபரப்பு - கஞ்சா சோதனையில் 500 போலீஸ் முழு விவரம் இதோ
கல்வி நிறுவனங்களை குறிவைத்து, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்த நிலையில்
சென்னை பொத்தேரியை அடுத்த காட்டாங்கொளத்தூரில் பிரபல பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் விடுதி மற்றும் கல்லூரியை சுற்றியுள்ள விடுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து 500 -க்கும் மேற்பட்ட போலீஸார் அதிகாலை 3 மணிக்கே அங்கு குவிந்தனர்.
குறிப்பாக அந்த கல்லூரிக்குச் சொந்தமான ஆண்கள், பெண்கள் விடுதி, சுற்றியுள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போலீஸார் சோதனை நடத்தினர். மேலும் விடுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கல்லூரி வளாகம், விடுதிகள் என போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போலீசார் , கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள், தனியாக தங்கள் வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையை ஈடுபட்டு வருகின்றனர்.ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருக்கிறதா? என ஆய்வு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags: தமிழக செய்திகள்