வடகொரியா வெள்ளத்தால் இறந்த 1000க்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத 30 அதிகாரிகளுக்கு தூக்குதண்டனை அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு Kim Jong Un orders
வடகொரியா வெள்ளத்தால் இறந்த 1000க்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத 30 அதிகாரிகளுக்கு தூக்குதண்டனை அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு
கடந்த மாத இறுதியில் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து 20 முதல் 30 அதிகாரிகள் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டதாக தென் கொரிய ஊடக அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
வடகொரியா Chagang மாகாணத்தில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 1,000 பேர்கள் வரையில் பலியானர்கள்
இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழைப்பை தடுக்கத் தவறியதால் 30 உயர் அதிகாரிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
மழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்ட போது நடவடிக்கை முன்னெடுக்க தவறிய அதிகாரிகள் என 30 அதிகாரிகள் கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டார்கள் என செய்தி தென் கொரியாவை தளமாகக் கொண்ட செய்தி நிலையமான சோசன் டிவியின் அறிக்கையின்படி, இந்த மரணதண்டனைகள் மாத இறுதியில் நடந்தன என வெளியாகி உள்ளது
மேலும் Chagang மாகாணத்தின் கட்சி செயலர் Kang Bong-hoon சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்