சாலையை கடந்த தாய் மீது கவிழ்ந்த ஆட்டோ ,ஆட்டோவை தூக்கி தாயை காப்பாற்றிய 14 வயது மகள் வைரல் வீடியோ mangalore girl lift auto
சாலையை கடந்த தாய் மீது கவிழ்ந்த ஆட்டோ ஆட்டோவை தூக்கி தாயை காப்பாற்றிய 14 வயது மகள் வைரல் வீடியோ
கர்நாடகாவில் ஒரு பள்ளி மாணவி தனது தாயையும் மற்றொரு பயணியையும் காப்பாற்றுவதற்காக கவிழ்ந்த ஆட்டோ ரிக்ஷாவை தூக்கிச் சென்றது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அருகிலுள்ள கினிகோலியில், 35 வயதான சேதனா, 8 ம் வகுப்பு படிக்கும் தனது மகள் வைபவியை டியூஷன் முடிந்து வீட்டிற்க்கு அழைத்துச் செல்வதற்காக சாலையைக் கடந்தபோது, அதிவேகமாக ஒரு ஆட்டோரிக்ஷா சேதனா மீது மோதாமல் இருக்க, டிரைவர் ரிக்ஷாவை சாலையோரம் சாய்த்தார். அப்போது அவர் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சேதனா மீது விழுந்தது.இந்த விபத்தில் ஆட்டோ அடியில் சேதனா சிக்கிக்கொண்டார்
டியூசனில் இருந்து வந்த மகள் இந்த விபத்தை வந்து தனது தாயின் மீது கவிழ்ந்த அந்த ஆட்டோவை தனி ஆளாக தூக்கி தனது தாயையும் மற்றொரு பயணியுடன் அவர் காப்பாற்றியுள்ளார்
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சேதனா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஓட்டுநர் மற்றும் மற்றொரு பயணி லேசான காயம் அடைந்தனர்.
இந்த செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. தற்போது அந்த வீடியோ சமூகவலைதங்களில் வைரல் ஆகின்றது
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1833139777513594884
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ