காதல் விவகாரம் :- திண்டுக்கல் அருகே 17 வயது சிறுமியை ஏர் கன்னால் சுட்ட 19 வயது இளைஞன் நடந்தது என்ன
திண்டுக்கல் அருகே 17 வயது சிறுமியை ஏர் கன்னால் சுட்ட 19 வயது இளைஞன் நடந்தது என்ன
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே துவராபதியைச் சேர்ந்தவர் பொன்னைகி (17) மதுரை மாவட்டம் கொட்டாம் பட்டியைச் சேர்ந்தவர் செல்வம்(19). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் துவராபதியில் உள்ள உறவினரின் வீட்டில் இன்று நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்காக வந்த செல்வம், தனது காதலியுடன், அவரது சித்தப்பா அண்ணாமலை என்பவரின் வீட்டில் வைத்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது செல்வத்திற்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அந்தச் சிறுமி, காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த செல்வம் அவரது சித்தப்பாவான அண்ணாமலை வீட்டில் வைத்திருந்த ஏர் கன் துப்பாக்கியால் காதலியை சுட்டுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த காதலி பொன்னழகி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செல்வம் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன், காதலியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags: தமிழக செய்திகள்