Breaking News

சிதம்பரம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி முழு விவரம்

அட்மின் மீடியா
0

சிதம்பரம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து 3 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி முழு விவரம் 5 members of the same family including a 2-year-old child were killed in a head-on collision between a car and a truck near Chidambaram.

சென்னையில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நோக்கி 5 பேருடன் கார் சென்றுக்கொண்டிருந்தது.  கார் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை பு. முட்லூர் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக லாரி  மீது எதிர்பாராத விதமாக கார் மற்றும் லாரி நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் லாரியின் அடியில் சிக்கி கொண்டது.

இந்த விபத்து குறித்து அப்பகுதியினர் போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் லாரியில் அடியில் சிக்கி இருந்த காரை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். இதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த யாசர் அராபத் (40), முகமது அன்வர் (58), ஹாஜிதா பேகம் (62), சாரா பாத் நிஷா (30), அப்னான் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 

மேலும் இவர்கள் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை சந்திப்பதற்காக சென்ற நிலையில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback