Breaking News

கூகுள் மேப்பை நம்பி காரை ஆற்றில் விட்ட நபர் கார் அடித்து செல்லப்பட்டு 2 பேர் பலி முழு விவரம் kerala google map died

அட்மின் மீடியா
0

கூகுள் மேப்பை நம்பி கார் ஆற்றில் விட்ட நபர் கார் அடித்து செல்லப்பட்டு 2 பேர் பலி முழு விவரம் A person left his car in the river relying on Google Maps, the car was swept away and 2 people were killed

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கேரள மாநிலம் குமரகோம் பகுதியில் உள்ள படகு வீட்டிற்க்கு சுற்றுலா சென்று விட்டு காரில் கோட்டயம் திரும்பி செல்ல வழி தெரியாததால் கூகுள் மேப்ஸ் காட்டிய வழியில் காரை ஒட்டி சென்றுள்ளார்கள்,

 


இவர்கள் வந்த கார் கைப்புழமூட்டு அருகே வந்த போது அங்குள்ள ஆற்றுப்பாலம் வழியாக கூகுள் காட்டிய வழியில் செல்லும் போது  கார் ஆற்று நீரில் கார் மூழ்கி அடித்து செல்லப்பட்டது. காரில் பயணம் செய்தவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உயிருக்கு போராடிய இருவரையும் மீட்க முயன்றனர்.ஆனால் காரில் இருந்த இருவரும் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காரில் இருந்த உடல்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback