சோழபுரத்தில் காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட ரூ.2 கோடி இடத்தை இலவசமாக வழங்கிய ஷாஜகான் முழு விவரம் Shahjahan gave Rs 2 crore free land to the police station in Cholapuram
சோழபுரத்தில் காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட ரூ.2 கோடி இடத்தை இலவசமாக வழங்கிய ஷாஜகான் முழு விவரம் Shahjahan gave Rs 2 crore free land to the police station in Cholapuram to build its own building
- காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் அமைக்க தனது ₹2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய நபர்..
- சொந்த ஊருக்கு என்னால் முடிந்த உதவி என நெகிழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்காவில் உள்ள சோழபுரம் காவல் நிலையத்துக்குச் சொந்தமாக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான இடம் தேடும் பணி நடந்தது கொண்டிருந்தது.
இந்நிலையில் அதே ஊரை சார்ந்த சேர்ந்த ஷாஜகான் என்பவர் காவல் நிலையத்துக்கு அருகிலேயே உள்ள தனக்குச் சொந்தமான இடத்தை காவல்நிலையத்திற்க்கு தானமாக வழங்க முன் வந்தார்.
அதன்படி இன்று திருவிடைமருதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோழபுரம் காவல் நிலையத்தின் பெயரில் தான பத்திரம் பதிவு செய்து அதற்கான காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 2 கோடி ஆகும்
இது பற்றி ஷாஜகான் அவர்கள் கூறியபோது:-
தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கும் காவல் நிலையத்துக்குச் சொந்தமாக கட்டிடம் கட்ட அதற்க்கான இடம் தேடிகொண்டிந்தனர் இன்று எனது 45வது திருமணநாள் மேலும் நமது ஊருக்கு என்னால் முடிந்த உதவி என நெகிழ்ச்சியுடன் கூறினார்
காவல் நிலையத்துக்காக ரூ. 2 கோடி மதிப்பிலான தனக்குச் சொந்தமான இடத்தை இலவசமாக தந்துள்ள ஷாஜகானுக்கு, காவல் துறையினரும் சமூக அமைப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி