Breaking News

வெள்ளையன் மறைவு 2 நாட்கள் கடையடைப்பு வணிகர் சங்க பேரவை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

வெள்ளையன் மறைவு 2 நாட்கள் கடையடைப்பு வணிகர் சங்க பேரவையின் பொதுச்செயலாளர் அறிவிப்பு

 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். வெள்ளையன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். 

மறைந்த வெள்ளையன் உடல் நாளை பெரம்பூரில் உள்ள வணிகர் சங்க பேரவையின் கட்டத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. 

மேலும் வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நாட்கள் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை வடமாவட்டங்களிலும், நாளை மறுநாள் தென்மாவட்டங்களிலும் கடையடைப்பு நடத்தப்பட உள்ளது. 

அதாவது நாளை (செப்.,11) ம் தேதி வட தமிழகத்திலும்,   

நாளை மறுநாள் (செப்.,12) ம் தேதி தென் தமிழகத்திலும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த தினங்களில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையில் செயல்படும் கடைகள் அடைக்கப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை வணிகர் சங்க பேரவையின் பொதுச்செயலாளர் சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback