Breaking News

கேரளா மலப்புரத்தில் நிபா வைரஸால் 24 வயது இளைஞர் உயிரிழப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

கேரளா மலப்புரத்தில் நிபா வைரஸால் 24 வயது இளைஞர் உயிரிழப்பு முழு விவரம்

கேரளாவில் உள்ள மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் உயிரிழந்த 24 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் தொற்று இருந்ததாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

 

கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், அருகே உள்ள நடுவத் எனும் பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கர்நாடகா மாநிலத்தில் படித்துவந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான நடுவத்திற்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு காய்ச்சல் ஏற்படவே, மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

இது குறித்து அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், 

உயிரிழந்த 23 வயது இளைஞருடன் இருந்த நபர்களை கண்டறிய கேரளா சுகாதாரத்துறை முடிவு செய்தது. அதில் அவருடன் தொடர்பில் இருந்ததாக 151 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்துள்ளது. இவருடன் நெருங்கி பழகியவர்களில் 5 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும், இருவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

தற்போது கேரளாவில் நிபா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள தீவிர தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நிபா வைரஸுக்கு தடுப்பு ஊசிகள் ஏதும் இல்லாததன் காரணமாக அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வரவும், முகக் கவசம் அணியும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback