Breaking News

அரசு ஊழியர்களுக்கான ஓய்வுகால பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!!

அட்மின் மீடியா
0

அரசு ஊழியர்களுக்கான ஓய்வுகால பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!!

 


தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வுகால பணிக்கொடையை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான இறப்பு, ஓய்வுகால பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்த்தியுள்ளது. 

ஓய்வுகால பணிக்கொடை உயர்வு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களில் 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றுவோர் ஓய்வு பெற்றால், அவர்களுக்கு ரூ.20 லட்சம் பணிக்கொடையாக வழங்கப்படுகிறது. இந்த தொகையை மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ரூ.25 லட்சமாக உயர்த்தியுள்ள நிலையில், தமிழக அரசும் தற்போது உயர்த்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback