Breaking News

தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. நெல்லையில் 2 ஆசிரியர்கள் பணி நீக்கம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. நெல்லையில் 2 ஆசிரியர்கள் பணிநீக்கம் முழு விவரம்

 


திருநெல்வேலி பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணர்கலிடம் பாலியல் ரீதியிலான சீண்டல்களில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் மிரட்டி பாலியல் ரீதியிலான சீண்டல்கள் கொடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் தெரிவித்து உள்ளனர்,அந்த புகாரின் அடிப்படையில், தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த ராபர்ட் புரூஸ் என்ற நபர் பணிநீக்கம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில், நிரந்தர ஆசிரியராகச் செயல்பட்டு வந்த நெல்சன் என்ற நபரையும் பணிநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback