ராதாபுரம் அருகே 3 வயது சிறுவன் கொலை கொலையாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம் A 3-year-old boy was killed near Radhapuram in Tirunelveli district
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே 3 வயது சிறுவன் கொலை நடந்தது என்ன அதிர்ச்சி தகவல் A 3-year-old boy was killed near Radhapuram in Tirunelveli district
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் விக்னேஷ் ரம்யா தம்பதியரின் 2 வது ஆண் குழந்தை சஞ்சய் இன்று வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளான். இதையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் எதிர்வீட்டினை சேர்ந்த தங்கம்மாள் என்ற பெண்மணி முன் விரோதம் காரணமாக சிறுவனை கொன்று சாக்கு மூட்டையில் போட்டு வைத்தது தெரியவந்தது.
போலீசார் அந்த பெண்மணியை கைது செய்து மேற்கொண்டு விசாரனை நடத்தி வருகின்றார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரனையில் தனது மகன் விபத்தில் இறந்ததால் மன அழுத்தத்தில் இருந்த தங்கம்மாள் மகன் உயிரிழந்த ஈம சடங்கிற்கு எதிர்வீட்டில் இருக்கும் விக்னேஷ் - ரம்யா தம்பதி வரவில்லை என்பதால் அவர்கள் மீது கோபம் இருந்ததாகவும், மகன் இறந்த பிறகு தங்கம்மாள் நான் வருத்தத்தில் இருக்கும்போது எதிர்வீட்டினர் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்வதை பொறுக்கமுடியவில்லை எதிர்வீட்டினர் மகிழ்ச்சியாக வாழ்வதை பொறுக்க முடியாமல் குழந்தையை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்