Breaking News

ஆந்திராவில் நட்பாக பழகி சயனைடு கலந்த காபி கொடுத்து கொலை செய்து நகை பணம் கொள்ளையடித்த 3 பெண்கள் கைது நடந்தது என்ன முழு விவரம்Cyanide Killings Three Women Arrested

அட்மின் மீடியா
0

ஆந்திராவில் நட்பாக பழகி சயனைடு கலந்த காபி கொடுத்து கொலை செய்து நகை பணம் கொள்ளையடித்த 3 பெண்கள் கைது நடந்தது என்ன முழு விவரம் Cyanide Killings Three Women Arrested 

Cyanide Killings Shock Andhra Pradesh, Three Women In Tenali Arrested For Murdering Four People

ஆந்திர மாநிலம் தெனாலி மாவட்டத்தை சேர்ந்த முனகப்பா ரஜினி (40), மதியலா வெங்கடேஸ்வரி (32), மற்றும் குல்ரா ரமணம்மா (60) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் ஆகிய 3 பெண்களை ஆந்திர மாநில போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

தெனாலி மாவட்டத்தில் தங்களுக்கு முன்பின் தெரியாத நபர்களிடம் அன்பாக பழகி நட்புவைத்து கொண்டு பின்னர் தங்கள் கொண்டு வந்த சையனடு கலந்த காபியை அவர்களை குடிக்க சொல்லி கொடுத்து விஷம் கலந்த காபியை குடித்ததும் உயிரிழக்கும் பெண்களிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். ஆந்திராவில் 4 பேரை அடுத்தடுத்து கொலை செய்து உள்ளனர். 

இந்த வழக்கை விசாரித்து வந்த தனிப்படை போலீசார் 3 பெண்களை கைது செய்துள்ளார்கள் அவர்களிடம் இருந்து சயனைடு மற்றும் முக்கிய ஆதாரங்களை கைப்பற்றினர். 

இதுகுறித்து தெனாலி காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் கூறுகையில், 

பெண்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், அந்நியர்களுடன் எளிதில் நட்பு கொள்வதை தவிர்க்கவும் போலீசார் எச்சரித்துள்ளனர். மூவர் செய்த குற்றங்களின் நோக்கம் மற்றும் சாத்தியமான கூட்டாளிகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback