சீனாவில் விநோதம் தூங்கும் போது மூக்கில் சென்ற கரப்பான் பூச்சி தொண்டையில் சிக்கி 3 நாட்களுக்கு பிறகு கரப்பான் பூச்சியை அகற்றிய மருத்துவர்கள் Man wakes to cockroach stuck in his throat
சீனாவில் விநோதம் தூங்கும் போது மூக்கில் சென்ற கரப்பான் பூச்சி தொண்டையில் சிக்கி 3 நாட்களுக்கு பிறகு கரப்பான் பூச்சியை அகற்றிய மருத்துவர்கள் A cockroach that entered the nose while sleeping got stuck in the throat and doctors removed the cockroach after 3 days
சீனாவின் ஹைக்கோவில் வசிக்கும் 58 வயதான ஒருவர் தூக்கத்தில் தற்செயலாக கரப்பான் பூச்சியை மூச்சுக் குழாய்க்குள் உள்ளிழுத்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒரு நாள் இரவு அந்த நபர் தூங்கிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் தொடங்கியது. மூக்கில் ஏதோ ஊர்வது போன்ற ஒரு வினோதமான உணர்வு எழுந்தது. திடுக்கிட்ட அவர் ஏதோ ஒன்று தொண்டையில் நழுவுவதை உணர்ந்தார் இருமி அதை வெளியேற்ற முயற்சி செய்ததும் அது தொண்டைக்குள் சென்றுவிட்டது. மறுநாள் தொடர்ந்து வாய் துர்நாற்றம் அடிக்கவே ஹைனான் மருத்துவமனைக்குச் சென்று ENT நிபுணரிடம் ஆலோசனை பெற்றார்.
அங்கு, அவரது மேல் சுவாசக் குழாயைப் பரிசோதித்ததில், அசாதாரணமான எதுவும் இல்லை. ஏதோ தவறு இருப்பதாக நம்பி, அவர் சுவாச மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர் டாக்டர் லின் லிங்கிடம் பரிந்துரைக்கப்பட்டார். அங்கு அருக்கு சி டி ஸ்கேன் எடுக்கப்பட்டது
அதில் அவரது தொண்டையின் நுரையீரலின் கீழ் வலது பகுதியில் ஒரு பொருள் சிக்கி இருப்பதை கண்டறிந்தார். உடனடியாக அவருக்கு ப்ரோன்கோஸ்கோபி சிகிச்சை மூலம் மூச்சுக்குழாயில் இறக்கைகளுடன் ஏதோ ஒன்றை வெளியே எடுக்க அது கரப்பான் பூச்சி என்பதை பார்த்து அதிர்ந்தனர். நோயாளி அனுபவித்த துர்நாற்றம் விரைவில் மறைந்தது. அவர் பூரண குணமடைந்து மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்