தமிழகத்தில் புதிதாக 3 இடங்களில் சுங்கச்சாவடி- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு Toll booths at 3 new places in Tamil Nadu
தமிழகத்தில் புதிதாக 3 இடங்களில் சுங்கச்சாவடி- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு Toll booths at 3 new places in Tamil Nadu - National Highways Authority announcement
தமிழகத்தில் புதிதாக அமைய உள்ள மூன்று சுங்கச்சாவடிகளுக்கான கட்டண விவரங்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 67 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்
விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான்,
திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி
ஆகிய மூன்று இடங்களில் புதிய சுங்கச்சாவடிகளுக்கான கட்டண விவரத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
நங்கிளி கொண்டான் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வருவதற்கான கட்டணம் 60 முதல் 400 ரூபாய் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் 95 முதல் 600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வருவதற்கான கட்டணம் 55 முதல் 370 ரூபாய் வரையிலும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் 85 முதல் 555 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாகம்பட்டி சுங்கச்சாவடியில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் 60 முதல் 400 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் 90 முதல் 600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வணிக உபயோகம் அல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு விதிக்கப்படும் மாதாந்திர பாஸ்கட்டணம் 340 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்