Breaking News

தேவகோட்டை அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி தஞ்சாவூரை சேர்ந்த 4 பேர் பலி மலேசியாவை சேர்ந்த 9 பேர் காயம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தேவகோட்டை தாலுகா காவல் நிலைய எல்லைக்குள் சனிக்கிழமை எதிரே வந்த சுற்றுலா வேன் மீது கார் மோதியதில் 2 பெண் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் காந்தி நகரைச் சேர்ந்த பால் டேனியல் (38), அவரது இரு மகள்கள் சூசன் (10), ஹெலன் சாமா (7) மற்றும் அவரது மாமா மைக்கேல் (63) ஆகியோர் டேனியல் ஓட்டிச் சென்ற காரில் உறவினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். தேவகோட்டை அருகே ஆண்டஊரணியில்.மதியம் 12.30 மணியளவில், மார்கண்டயன்பட்டி மணிமுத்தாறு பாலத்தில், 

எதிர்திசையில், மலேசியாவில் இருந்து, 12 பேர், ராமேஸ்வரத்தில் இருந்து, திருச்சி நோக்கிச் சென்றபோது தேவகோட்டை அருகே மார்க்கண்டேயன்பட்டி மணிமுத்தாறு ஆற்றுப் பாலம் அருகே டெம்போ வேனும்- காரும் நேருக்கு நேராக மோதியது. இந்தச் சம்பவத்தில் வேனில் இருந்த ஓட்டுநர் மற்றும் 9 மலேசிய நாட்டினர் காயமடைந்தனர். விபத்துபற்றிய தகவல் அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தாலுகா காவல் ஆய்வாளர் சரவணன் வட்டாட்சியர் சேதுநம்பு ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சம்பவ இடத்திலேயே  தஞ்சாவூரை சேர்ந்த பவுல் டேனியல் , சூசன்ரேமா, ஹெலன் சாமா , மைக்கேல் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். 

மலேசியா நாட்டைச் சேர்ந்த யோகேஸ்வரி (38 ), மோகாசினி( 21) அமுதாதேவி (46) குணசுந்தரி ( 51) ரேணுகா ( 51) சந்திரன்( 55) ரெவின் (26 ) ஆகியோர்கள் பலத்தகாயமடைந்தனர் சிகிச்சைக்காகத் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சைக்காகக் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தேவகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback