Breaking News

தினமும் கணவர் குளிக்காததால் திருமணம் ஆன 40 நாளில் விவாகரத்துக் கோரும் மனைவி

அட்மின் மீடியா
0

தினமும் கணவர் குளிக்காததால் திருமணம் ஆன 40 நாளில் விவாகரத்துக் கோரும் மனைவி

உத்தரப் பிரதேசம், ஆக்ராவைச் சேர்ந்த ராஜேஷ், கங்கை நதி நீரை வாரம் ஒருமுறை தெளித்துக் கொள்வார் எனத் தெரிகிறது. மேலும் மனைவி வற்புறுத்ததால் 40 நாளில் 6 முறை மட்டுமே குளித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் அவரிடம் இருந்து பிரிய முடிவெடுத்த பெண் கோர்ட்டை நாடியுள்ளார்.தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் தினமும் குளிக்காமல் இருந்துள்ளார். இதனால் கணவர் அருகே வரும்போது எல்லாம் துர்நாற்றம் அடிப்பதாக கூறியுள்ளார் மனைவி.

இருந்தும் இவர் மனைவியின் கட்டாயத்தில் திருமணம் நடந்த 40 நாட்களில் 6 முறை மட்டுமே குளித்துள்ளார். மேலும் வாரம் ஒருமுறை கங்கை நீரை உடலில் தெளித்துக் கொண்டு இது புனிதம் என கூறிவந்துள்ளார்.எவ்வளவு சொல்லியும் கணவன் குளிக்காமல் இருந்ததால் மனைவி நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் ஒருவாத்திற்கு ஆலோசனை மையத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர். கணவர் குளிக்காததால் விவாகரத்துக் கோரும் மனைவி நீதிமன்றம் சென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback