Breaking News

ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு 500 காலி பணியிடங்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு 500 காலி பணியிடங்கள் முழு விவரம்

 


சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரண்டிஸ் எனப்படும் தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் பழகுநர் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மாதம் ₹14,000 உதவித்தொகையுடன் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது! 

எம்எம்வி, 

மெக்கானிக் டீசல், 

எலக்ட்ரீஷியன், 

ஆட்டோ எலக்ட்ரீஷியன், 

வெல்டர், 

ஃபிட்டர், 

டர்னர், 

பெயின்டர் 

ஆகிய பிரிவுகளில் 500 காலியிடங்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி: 

சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: ரூ. 14,000 

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக தொழிற்பயிற்சி பள்ளியில் வரும் 26ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்!

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback