Breaking News

மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி என சந்தேகப்பட்டு ஓடும் ரயிலில் 72 வயது முதியவரை சக பயணிகள் சரமாரியாகத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ A Muslim man assaulted on train over suspicion of carrying beef

அட்மின் மீடியா
0

மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி என சந்தேகப்பட்டு ஓடும் ரயிலில் 72 வயது முதியவரை சக பயணிகள் சரமாரியாகத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ 

மகாராஷ்டிராவில் ரெயிலில் மாட்டிறைச்சி எடுத்து வந்ததாக முதியவரை சக பயணிகள் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 



ஹாஜி அஷ்ரஃப் முனியர் Haji Ashraf Munyar மாகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் வசிப்பவர் இவர் நாசிக் மாவட்டத்தில் இருந்து கல்யாண் நகருக்கு  துலே எக்பிரஸ் ரெயிலில் சாதரண பெட்டியில் சென்று கொண்டிருந்தார்.

அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் ஜாடியில் இறைச்சித் துண்டுகள் இருந்ததாகத் தெரிகிறது. அது மாட்டிறைச்சி என்று குற்றம் சாட்டிய சக பயணிகள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கன்னத்தில் அறைந்தும் சரமாரியாக தாக்கியுள்ளனர். 

வைரல் வீடியோ கிளிப்பில், சுமார் 72 வயது முதியவர் அந்த ரயில் பெட்டியில் சுமார் 12 சக பயணிகளால் சூழப்பட்டிருப்பதைக் காணலாம். அவர் கல்யாணில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு இந்த இறைச்சியை எடுத்து செல்வதாக கூறியுள்ளார் ஆனால் அதனை கேட்காத அவர்களில் சிலர் அந்த முதியவரை தாக்குவதையும், திட்டுவதையும் காணலாம்

இந்த சம்பவம் தொடர்பாக தானே ரயில்வே காவல் நிலையத்தில் 189(2), 191(2), 190, 126(2), 115(2), 324(4)(5), 351(2)(3) 352 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுவரை மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்,மீதி நபர்களை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர். 

இந்த சம்பவத்தை ரயிலில் பயணி ஒருவர் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1830109898669219865

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback