Breaking News

8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை- முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.
8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி அரசு, மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து, தி.மு.க.,-காங்., உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் இன்று 'பந்த்' அறிவித்துள்ளன. இதற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், தனியார் பள்ளிகள் பல, விடுமுறை அறிவித்துள்ளன.

எதிர்கட்சிகள் நடத்தும் 'பந்த்' காரணமாக ஆட்டோ மற்றும் பஸ்கள் சரிவர இயங்காது. இதனால், பள்ளி செல்லும் சிறுவர்கள் மற்றும் பெற்றோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாவர். அதனை தவிர்க்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்புவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback