புதுச்சேரி 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கைதி தற்கொலை
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதியவர் விவேகானந்தன் (57) கழிவறையில் தற்கொலை செய்துள்ளார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் காணாமல்போன 9 வயது சிறுமி, சிறுமியின் உடல் அவரது வீட்டின் அருகே உள்ள சாக்கடையில் மூன்று நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுமியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி அவைதனர்.பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்
இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19) என்ற வாலிபரையும் விவேகானந்தன் (57) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இருவருமே சிலமுறை காலாப்பட்டு மத்திய சிறையில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்ட நிலையில் இவர்களை கண்காணிப்பதற்காகவே தனியாக காவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை விவேகானந்தன் சிறையில் உள்ள கழிப்பறையில் தனது துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
நாளை வழக்கு விசாரணை ஆஜர் ஆக வேண்டிய நிலையில் தான் விவேகானந்தன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அவரது உடலை மீட்ட சிறை அதிகாரிகள் காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காலாப்பட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் புதுச்சேரி செய்திகள்