Breaking News

இலங்கை அதிபர் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க வெற்றி! இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Anura Kumara Dissanayake is the new President of Sri Lanka

அட்மின் மீடியா
0

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார். அவர் நாளை பதவியேற்க உள்ளார்.

Anura Kumara Dissanayake is the new President of Sri Lanka
Anura Kumara Dissanayake is the new President of Sri Lanka

அநுர குமார திசநாயக்க

அனுராதபுரத்தில் 1968-ல் எளிய குடும்பத்தில் பிறந்தவர் 55 வயதான திசநாயகே அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புத்தேகம கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். களனி பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர், தனது கல்லூரி நாட்களிலேயே மாணவர் அரசியலில் ஈடுபட்டார்.

1987ஆம் ஆண்டு முதல் ஜனதா விமுக்தி பெருமுனாவில் இணைந்து தற்போது அதன் தலைவராக உள்ளார்  மேலும் தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் தலைவராக உள்ளார்

மாற்றத்தை முன்னிறுத்தி தேர்தலை கண்ட ஏகேடிக்கு அமோக வரவேற்பு: இளைஞர்கள், சிங்களர்கள், தமிழர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மாற்றத்துக்கு வாக்களிப்பு

இலங்கையின் புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுர குமார திசநாயக்க இலங்கை  அதிபராகிறார். 

இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் மார்க்சிஸ்டு தலைவரான அனுரா குமார திசநாயகே  வெற்றி பெற்றுள்ளார். 

இந்த தேர்தலில், எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். ரணில் விக்ரமசிங்கே 3-வது இடத்திற்கு சென்றுள்ளார்.

முதல் சுற்றில் 56,34,915 (42.3 சதவீதம்) வாக்குகளுடன் திசநாயகே முன்னிலை பெற்றார். பிரேமதாசா 43,63,035 (32.76 சதவீதம்) வாக்குகளுடன் 2-வது இடம் பெற்றார். 

இந்நிலையில், 2-வது சுற்றுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்தது. இதில், திசநாயகே வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதனுடைய வலைதளத்தில் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்து உள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback