ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் என்ன என்பதை விரைவில் தெரிவிப்போம்- காவல் ஆணையர் Armstrong's murder case
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் என்ன என்பதை விரைவில் தெரிவிப்போம்- காவல் ஆணையர் We will soon reveal the reason behind Armstrong's murder - Commissioner of Police
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பான நிலவரம் குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவிக்கையில்,
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் 90 சதவீதம் விசாரணை முடிவடைந்துவிட்டது. இந்த கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம். ஒரு வாரத்தில் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். குற்றப்பத்திரிகை தயார் நிலையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்