சிறையில் இருந்து வெளியே வந்தார் அர்விந்த் கெஜ்ரிவால் முழு விவரம் Arvind Kejriwal came out of jail
சிறையில் இருந்து வெளியே வந்தார் அர்விந்த் கெஜ்ரிவால் முழு விவரம் Arvind Kejriwal came out of jail
திகார் சிறையில் இருந்து இன்று (செப்.13) ஜாமீனில் வெளியே வந்த ஆம் ஆத்மி கட்சியில் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு திகார் சிறைக்கு வெளியே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் மக்களவைத் தேர்தலையொட்டி உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
அதன் பின்பு ஜாமின் முடிந்து சிறை சென்ற கெஜ்ரிவால் மீண்டும் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
6 மாதமாக சிறையில் இருந்த டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.திகார் சிறையில் இருந்து விடுதலையான கெஜ்ரிவாலை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இன்று மாலை திகார் சிறையில் இருந்து அரவிந்த் கேஜரிவால் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் வெளியே வந்த போது பலத்த மழை பெய்தது. மழையையும் பொருள்படுத்தாமல் அவரது ஆதரவாளர்கள் குடைகளுடன் வந்து அவரை வரவேற்று கோஷமிட்டனர்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்