Breaking News

வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தவர்களை தாக்கிய குள்ளநரி வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தவர்களை தாக்கிய குள்ளநரி வைரல் வீடியோ

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் சாலையோரத்தில் அமர்ந்திருந்த இருவர் மீது குள்ளநரி பாய்து தாக்கும் வீடியோ காட்சிகள்  Video footage of a jackal pouncing on two people sitting on the roadside in Sehore district of Madhya Pradesh.

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் உள்ள ரெஹ்தி தெஹ்சில் சகோனியா பஞ்சாயத்தில் நடந்த இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

ஷ்யாம் யாதவ் மற்றும் நர்மதா பிரசாத் ஆகிய 2 பேர் சாலையோரம் அமர்ந்திருந்தபோது அவர்கள் மீது குள்ளநரி பாயும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

குள்ளநரி தாக்க முற்பட்டதை அடுத்து, அவர்கள் அதன் மீது கற்களை எறிந்து நரியை விரட்ட முயன்றனர்.ஆனாலும் அவரை குள்ளநரி தாக்க முற்ப்பட்டதால் இருவரில் ஒருவர் நரியை பிடித்து தூக்கி எறிந்தார். இதில் அந்த குள்ளநரி சுமார் 15 அடி தூரம் சென்று கீழே விழுந்தது.

இந்த சம்பவத்தில் குள்ளநரி தாக்குதலில் காயமடைந்த ஷியாம் யாதவ் மற்றும் நர்மதா பிரசாத் ஆகிய இருவரும் நர்மதாபுரம் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1834063530582016425

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback