Breaking News

கட்டு வீரியன் பாம்பை வீட்டுக்குள் கவ்வி வந்த பூனை - பாம்பு கடித்து பெண் பலி முழு விவரம்

அட்மின் மீடியா
0

பாம்பை வீட்டுக்குள் கவ்வி வந்த பூனை பாம்பு கடித்து பெண் பலி முழு விவரம்



கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நேரு நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சாந்தி (வயது 58). இந்த - தம்பதியின் மகன் சந்தோஷ்.

இவர்கள் ஒரு பூனையை வளர்த்து வருகின்றனர்.சம்பவத்தன்று கட்டுவிரியன் பாம்பை கவனித்த பூனை அந்த பாம்பை வாயில் கவ்வி வீட்டில் சாந்தி தூங்கி கொண்டு இருக்கும் அறையில் போட்டுவிட்டு சென்றது. 

பாம்பு தூங்கி கொண்டு இருந்த சாந்தியை கடித்தது. இதனால் திடுக்கிட்டு எழுந்த சாந்தி பாம்பு கடித்ததை அறிந்து அலறினார்.அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் சந்தோஷ் ஓடி வந்தார். அவர் உடனடியாக சாந்தியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வளர்த்த பூனையே பெண்ணின் உயிருக்கு வினையான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback