Breaking News

வார விடுமுறையொட்டி சிறப்பு பேருந்து அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல் 

20/09/2024 (வெள்ளிக்கிழமை) 21/09/2024 (சனிக்கிழமை) 22/09/2024 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 



இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 20/09/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 260 பேருந்துகளும், 21/09/2024 (சனிக்கிழமை) 260 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை. வேளாங்கண்ணி. ஒசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 20/09/2024 வெள்ளிக் கிழமை அன்று 65 பேருந்துகளும் 21/09/2024 சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது 

மற்றும் பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 20/09/2024 அன்று 20 பேருந்துகளும் 21/09/2024 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 5,730 பயணிகளும் சனிக்கிழமை 2,706 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6.312 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். 

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு அரசு போக்குவரத்து கழகம் வலியுறுத்தியுள்ளது. 

வார விடுமுறையையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டும் பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல தெற்கு ரயில்வே சார்பிலும் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான முன்பதிவும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback