பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்
பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்
பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன், மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு பாஜகவில் சேர்ந்து அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்
இது குறித்து அஇஅதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த டாக்டர் வா. மைத்ரேயன், Ex. M.P., அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (12.9.2024 வியாழக் கிழமை), நேரில் சந்தித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார்.
அதனை, கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் பரிசீலனை செய்து, டாக்டர் வா. மைத்ரேயன், Ex. M.P., அவர்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொண்டார்.என அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள்