பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்க்கு :- ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்க்கு :- ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
- பொங்கல் பண்டிகை பயணம் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 12 முதல் தொடங்குகிறது!
- ரயிலில் பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.
பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ந்தேதி தொடங்குகிறது.
ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள். பயணிகளின் வசதிக்காக வும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரெயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட் களுக்கு முன்பே தொடங்கும்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு
ஜனவரி 13- ந்தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை,
14-ந்தேதி பொங் கல் பண்டிகை (செவ்வாய்க் கிழமை),
15-ந்தேதி மாட்டுப் பொங்கல் (புதன்கிழமை),
16- ந்தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது
பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக ரெயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ந்தேதி முதல் தொடங்குகிறது.அந்த வகையில்,
ஜனவரி 10-ந் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 12-ந்தேதியும், |
ஜனவரி 11-ந் தேதிக்கு பயணம் செய்ய 13-ந்தேதியும்,
ஜனவரி 12-ந்தேதிக்கு வரும் 14-ந்தேதியும்
ஜனவரி 13-ந்தேதி அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15-ந்தேதியும்
ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்