Breaking News

முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் 

கிளாம்பாக்கத்திலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு செப்.13, செப்.14ல் 955 பேருந்துகள் கூடுதலாக இயக்க முடிவு 

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செப்.13, செப்.14ல் 190 பேருந்துகள் கூடுதலாக இயக்க முடிவு 

மாதாவரத்திலிருந்து செப்.13, செப். 14ல் 20 பேருந்துகள் கூடுதலாக இயக்க முடிவு 

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு 

ஞாயிறு (செப்.15) முதல் செவ்வாய்(செப்.17) வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

 

 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

தொடர் விடுமுறை, முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள்- இயக்கம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல் 

13/09/2024 (வெள்ளிக் கிழமை) 14/09/2024 (சனிக்கிழமை), 15/09/2024 (ஞாயிற்றுக் கிழமை முகூர்த்தம்) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 13/09/2024, 14/09/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13/09/2024, (வெள்ளிக் கிழமை) மற்றும் 14/09/2024 (சனிக் கிழமை) ஆகிய நாட்களில் 955 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 13/09/2024 (வெள்ளிக் கிழமை) மற்றும் 14/09/2024 (சனிக்கிழமை) அன்று 190 பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 13/09/2024 வெள்ளிக்கிழமை மற்றும் 14/09/2024 (சனிக்கிழமை) அன்று 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது 

மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு முதல் செவ்வாய் வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 21,849 பயணிகளும் சனிக்கிழமை அன்று 11,724 பயணிகளும் ஞாயிறு அன்று 14,271 பயணிகளும் திங்கட்கிழமை அன்று 11,710 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். போதிய அலுவலர்கள் எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை தெரிவிக்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback