நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நாளை (செப். 11) கொண்டாடப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்டம்பர் 11-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
அன்றைய தினம் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.
குறிப்பாக இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்