Breaking News

வேலூர் அருகே பயங்கரம் இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தை எருக்கம் பால் ஊற்றி கொலை செய்த தந்தை நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

வேலூர் அருகே பயங்கரம் இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தை எருக்கம் பால் ஊற்றி கொலை செய்த தந்தை நடந்தது என்ன முழு விவரம்

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பொம்மன்குட்டை பகுதியை சேர்ந்த ஜீவா (30) என்கிற சேட்டு (25) டயானா தம்பதியினர் தங்களின் இரண்டாவதாக பிறந்த குழந்தை பெண் குழந்தை என்பதால் அம்மா வீட்டில் இருந்த மனைவியை வரவழைத்து பிறந்து எட்டு நாளே ஆன பெண் குழந்தைக்கு எருக்கன் செடி பாலை கொடுத்து பச்சிளம் குழந்தையை கொலை செய்து , தூங்கி கொண்டிருந்த மனைவி டயானாவின் அருகில் குழந்தையை  வைத்துள்ளார்.

பின்னர் வெளியே சென்று வந்த ஜீவா குழந்தை என்ன ஆனது ஏன் அழாமல் இருக்கிறது  என மனையிடம் கேட்டுள்ளார் அதன்பின்பு  தகவல் அறிந்து டயானாவின் பெற்றோரான சரவணன் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் வந்து குழந்தையை தூக்கிப் பார்த்தபோது வாயில் ரத்தம் வந்துள்ளது.

உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல முற்பட்டபோது அவர்கலிடம் சண்டை யிட்டு வெளியே தள்ளி தோட்டத்தில் குழந்தையை புதைத்துள்ளார், சம்பவம் அறிந்து வந்த போலீசார் புதைத்த இடத்தில் இருந்து குழந்தையை மீட்ட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த தம்பதியினரை தேடி வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுளார்கள் 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback