Breaking News

பாடகர் மனோவின் மகன்கள் வழக்கில் திருப்பம்:- மனோவின் மகன்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் வெளியான புதிய சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

பாடகர் மனோவின் மகன்கள் வழக்கில் திருப்பம்:-  மனோவின் மகன்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் வெளியான சிசிடிவி வீடியோ

  • சென்னை வளசரவாக்கத்தில், சிறுவர்களை தாக்கியதாக பாடகர் மனோவின் மகன்கள் மீது FIR 

  • மனோவின் மகன்கள் குடிபோதையில் சிலரை தாக்கியதாக முதலில் புகார் எழுந்தது ஆனால், மனோவின் மகன்களிடம் சிலர் வாக்குவாதம் செய்துவிட்டு ஆட்களை அழைத்து வந்தது அம்பலம் 

  • பேசிக் கொண்டிருந்த போது திடீரென மனோவின் மகன்களை கற்கள், கட்டைகளை வைத்து சரமாரியாக தாக்கப்படும் காட்சி சிசிடிவியில் பதிவு


நடிகர் மனோவின் மகன்கள் சிறுவன் மீது தாக்குதல் நடத்தியதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிறுவனை மதுபோதையில் தாக்கியதாக மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக் மற்றும் வீட்டு பணியாளர்கள் இருவர் உள்பட 4 பேர் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மனோவின் மகன்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுபோதையில் வாலிபர் மற்றும் சிறுவனை தாக்கியதாக பாடகர் மனோ மகன்கள் மீது எழுந்த புகார் விவகாரத்தில், இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

முன்னதாக பாடகர் மனோவின் மகன்கள் மட்டுமே தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் உள்ளிட்டவர்கள் தங்களது நண்பர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுடன் மனோ வீட்டு வாசலில், அவரது மகன்களை கல் மற்றும் கத்தி உள்ளிட்டவற்றால் தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. 

அந்த வீடியோ காட்சியில் 4 டூவீலர்களில் வந்த 10க்கும் மேற்பட்டோர் மனோவின் இரு மகன்களை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த காட்சியை அடிப்படையாகக் கொண்டு பாடகர் மனோ சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback