Breaking News

பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு தட்டிக்கேட்ட ஆசிரியரை பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

அட்மின் மீடியா
0

அரசுப் பள்ளியில் கல்விக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத கருத்துகளை பேசிய நபரை தட்டிக்கேட்ட ஆசிரியர் சங்கருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர். ஆனால் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும், இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 


அத்துடன் சொற்பொழிவு ஆற்றிய மகா விஷ்ணுவின் பேச்சுக்கு பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டனம் தெரிவித்தார். ஆனால் அவரிடமும் மகா விஷ்ணு உரத்தக்குரலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்தது. 

 

அரசுப் பள்ளிகளில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை பேச்சு வீடியோ பார்க்க  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/09/blog-post_55.html


இதில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.ஆன்மிக சொற்பொழிவாளரின் பிற்போக்கு சிந்தனைகளை கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கரையும் பாராட்டினார். அவர், தனது இரு கண்களையும் இழந்த தமிழ் ஆசிரியர் சங்கருக்கு, கண்ணாக இருப்பது அவர் படித்த கல்விதான். யாராவது பிற்போக்கு கருத்துக்களை சொன்னால் எதிர்த்து கேள்வி கேட்பவர். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். அதுவும் தமிழ் ஆசிரியர். தமிழ் என்றாவது நம்மை கைவிடுமா? என்று தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும். இந்த விவகாரத்தில் உங்களுக்கு இருக்கும் அதே உணர்வுதான் முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் உள்ளது” என்றார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback