அமெரிக்காவில் பரபரப்பு கோல்ப் மைதானத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு! நடந்தது என்ன முழு விவரம் Donald Trump Golf Club Shooting
அமெரிக்காவில் பரபரப்பு முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு! நடந்தது என்ன முழு விவரம் Donald Trump Golf Club Shooting
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சில வாரங்களில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடாவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் டிரம்ப் விளயாடிக் கொண்டிருந்தபோது, வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக எஃப்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது அருகாமையில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. ஆனால் வதந்திகள் கட்டுப்பாட்டை மீறத் தொடங்கும் முன், இதை நீங்கள் முதலில் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறேன். எதுவும் என்னை மெதுவாக்காது. நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்” என தனது தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ரியான் வெஸ்லி ரூத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்