அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல் நடத்திய விவகாரம் 7 பேர் கைது A man was arrested in attack on a female DSP in Aruppukkottai
அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல் நடத்திய விவகாரம் ஒருவர் கைது A man was arrested in attack on a female DSP in Aruppukkottai
அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி மீதான தாக்குதல் சம்பவத்தில் 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் நெல்லிக்குளத்தைச் சேந்த சரக்கு வாகன ஓட்டுனர் காளிகுமார் நேற்று திருச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது சேத்தநாயக்கன்பட்டி அருகே 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டர்
இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி காளிகுமாரின் உறவினர்கள் அருப்புக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவம் அறிந்து அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது போராட்டக்காரர்கள் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள், பெண் டிஎஸ்பியின் தலைமுடியை பிடித்து இழுத்துள்ளார்கள் இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் 7 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்